கொமன்வெல்த் போட்டிக்காக இங்கிலாந்து  வரும் கிளிநொச்சி இளைஞன்

குத்துச்சண்டை போட்டியில் பங்குபற்ற இங்கிலாந்துக்கு கிளிநொச்சி மண்ணிலிருந்து இளைஞர் ஒருவர் தகுதிபெற்றுள்ளார்.

இங்கிலாந்தின் பேர்மிங்ஹாமில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் 2022 போட்டிகளிலேயே குறித்த இளைஞன்  குத்துச்சண்டை போட்டிக்காக தகுதிபெற்றுள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தின்  தருமபுரம் பகுதியில் அமைந்துள்ள நாதன் குடியிருப்பு என்ற இடத்தை வாழ்விடமாகக் கொண்ட விட்டாலிஸ் நிக்லஸ் என்னும் வீரரே குறித்த உலக போட்டிகளில் பங்குபற்ற தெரிவாகி வீரர் ஆவார்.


குறித்த வீரர் அகில இலங்கை ரீதியான பல போட்டிகளில் பங்குபற்றியவர் மட்டுமல்லாது பதக்கங்களை பெற்ற வீரருமாவார்.

தகுதிகாண் போட்டிகளிலும் சிறப்புத்திறமையை வெற்றியுடன்  வெளிப்படுத்திய வீரர் நிக்கிலஸ் , வரும் கொமன்வெல்த் போட்டிகளில் பங்குபற்ற சிறீலங்காவிலிருந்து இங்கிலாந்து வருகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.


குறித்த கொமன்வெல்த் போட்டிகள் வரும் ஜூலைமாதம் 28ம் தேதி இங்கிலாந்தின் பேர்மிங்கத்தில் துவங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *