வெளிநாட்டு தொழிலாளர்களிடமிருந்து குடியுரிமைக்கு 3,000 விண்ணப்பங்கள்

வைரஸ் நெருக்கடி காலத்தில் பணியாற்றிய வெளிநாட்டுத் தொழிலாளர்களிடம் இருந்து இதுவரை சுமார் மூவாயிரம் குடியுரிமைக் கோரிக்கைகள் கிடைத்துள்ளன என்று குடியுரிமைக்கான அமைச்சர் மார்லின் ஷியாப்பா (Marlène Schiappa) தெரிவித்திருக்கிறார்.

தேசத்துடன் தங்களது நெருக்கத்தை தொழில் மூலமாக நிரூபித்த இவர்களுக்கு குடியுரிமை வழங்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இவர்களில் 700 பேருக்கு குடியுரிமை வழங்கும் பரிசீலனைகள் நிறைவடைந்துள்ளன என்றும் அமைச்சர்ஷியாப்பாவின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பிரான்ஸில் வைரஸ் தொற்று ஆபத்து மிகுந்த முன்னரங்கத் தொழில் துறைகளில் பணியாற்றிய வெளிநாட்டவர்களது குடியுரிமை விண்ணப்பங்களை துரித கதியில் பரிசீலித்து அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி இதுவரை கடந்த மூன்று மாதங்களில் 2ஆயிரத்து 890 பேரது விண்ணப்பங்கள் பொலீஸ் பிரிவுகளுக்கு கிடைத்துள்ளன என்பதை உள்துறை அமைச்சு செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளது.இவர்களில் 74 பேருக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.

693 பேரது விண்ணப்பங்கள் பரிசீலனை முடிவடைந்து குடியுரிமை வழங்கும் கட்டத்தில் உள்ளன-என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா நெருக்கடிக்குள் பணியாற்றுகின்ற வெளிநாட்டு மருத்துவர்கள், தாதியர், அவசர சேவையாளர்கள், காசாளர்கள், கழிவு அகற்றுவோர், துப்புரவுப்பணியாளர்கள் போன்றவர்களது குடியுரிமை விண்ணப்பங்களை துரிதகதியில் பரிசீலிக்கும் நடவடிக்கைகள் கடந்த மூன்று மாத காலமாக நடைபெற்றுவருகின்றன.

🔴குடியுரிமைக்கு முன்னுரிமை பெறுவோரது தொழில் துறைகள் வருமாறு :(ஆங்கிலத்தில்) Maintenance workers, Garbage men, Education and teaching staff, Truck drivers and deliverers, Security agents, Agricultural sector, Postmen Food trade sector (for example, cashiers)Home help, Funeral operator staff Professionals in the screening sector, Agribusiness, Maternal assistants, Health or care personnel Child protection, Medical and paramedical industry sector, Self-employed workers meeting basic needs.

குமாரதாஸன். பாரிஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *