கமராவில் முகமும் கைகளுமாகப் பிடிபட்ட மேற்றிராணியாரின் பதவி விலகலைப் பாப்பாண்டவர் ஏற்றுக்கொண்டார்.

பிரேசிலைச் சேர்ந்த மேற்றிராணியாரான 60 வயதான தொமே பெரேரா ட சில்வா தனது பதவி விலகலைப் பாப்பாண்டவரிடம் சமர்ப்பித்தார். São José do Rio Preto பிராந்தியத்தின் மேற்றிராணியாரான அவர் சம்பந்தப்பட்ட பாலியல் செயலொன்றான படத்துணுக்கு சமூகவலைத்தளங்களில் வெளியாகியதைத் தொடர்ந்தே அவர் தனது பதவியிலிருந்து விலகுவதாகப் பாப்பாண்டவருக்கு எழுதியிருந்தார். அவரது விலகல் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக வத்திக்கான் தெரிவித்திருக்கிறது.

கடந்த வாரத்தில் இணையத்தில் தொமே பெரேரா ட சில்வா தனது கையால் சுய இன்பம் செய்துகொண்டிருக்கும் ஒரு நிமிடப் படத் துணுக்கு ஒன்று பரவியிருந்தது. அதை அவர் ஒரு தொலைத்தொடர்பு மூலம் இன்னொரு ஆணுடன் செய்திருந்தார். 

சுய இன்பம் செய்துகொள்வது ஒருவருடைய ஆழமான ஒழுங்கின்மையைக் காட்டுகிறது. திருமணத்துக்கு வெளியேயான பாலியல் தொடர்பு முழுக்க முழுக்க அதன் அர்த்தத்துக்கு எதிரான நோக்கத்தை வெளிப்படுத்துகிறது, என்கிறது கத்தோலிக்க மதக் கோட்பாடு.

2012 இலிருந்து அந்த உயர் பதவியிலிருக்கும் குறிப்பிட்ட மேற்றாணியார் மீது பாலியல் சம்பந்தப்பட்ட குற்றங்கள் சாட்டப்படுவது இது முதல் தடவையல்ல. பல சந்தர்ப்பங்களில், பல திசைகளிலிருந்தும் அவர் மீதான அப்படியான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருக்கின்றன. ஆனால், ஒவ்வொரு தடவையும் அவர் அக்குற்றச்சாட்டுக்களிலிருந்து ஏதோ வழியில் தப்பிவிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த முறை அவரால் தப்பிக்க முடியாத நிலைமையில் பிரேசிலின் ஊடகமொன்றில் அந்தச் செயலில் ஈடுபட்டது தானே என்பதை அவர் பகிரங்கமாக ஒத்துக்கொண்டார். தன்னைப் பழிவாங்க அதை வெளியே பரப்பியது தன்னுடன் வாழும் ஒரு நபரே என்று குற்றஞ்சாட்டிய அவர் அதுபற்றித் தான் சட்டபூர்வமான நடவடிக்கைகள் எடுத்திருப்பதாகத் தெரிவித்தார்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *