உகண்டாவின் தலைநகரில் வெடித்த இரண்டு குண்டுகள்!

உகண்டாவின் பாராளுமன்றக் கட்டடம், சற்று அருகிலிருக்கும் வேறொரு தனியார் நிறுவனக் கட்டடம் ஆகியவற்றையடுத்து இரண்டு குண்டுகள் கம்பாலாவில்செவ்வாயன்று வெடித்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த வாரம் நகரின் மற்றொரு பகுதியில் மேலுமொரு குண்டு வெடித்து ஒருவர் இறந்திருக்க மேலும் பலர் காயமடைந்தார்கள்.

சமூக வலைத் தளங்களில் குண்டு வெடித்தது பற்றிய பல படங்கள் பரவி வருகின்றன. நகரின் தொலைக்காட்சி இரண்டு பேர் இறந்திருப்பது தெரியும் என்றும் மேலும் எத்தனை பேர் இறந்தார்கள் என்ற விபரங்கள் வெளியிடப்படவில்லை என்று குறிப்பிட்டிருக்கின்றது. மருத்துவசாலையில் 24 பேர் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் நாலு பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார்கள்.

பாராளுமன்றக் கட்டடத்தினுள்ளிருந்த அரசியல்வாதிகள் ஊழியர்கள் அங்கிருந்து உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டிருக்கிறார்கள்.

சாள்ஸ் ஜெ. போமன்