தவிப்பு


முன்னெப்போதும் இல்லாத ஓர் உணர்வின் வசமானேன்….

அதன் பெயர் என்னவாக இருக்க க்கூடும்….

தேடலா….

தொலைதலா….

தேடும் போது
தொலைந்ததா….

தொலைந்ததால்
தேடலா…..

குழப்ப உணர்வா
இல்லை இல்லை
தெளிவான ஓர்
உணர்வு….

பகலுக்குப் பின் வரும் இரவு போலும்….

இரவின் பின் வரும் பகல் போலும்…..

தன்வாலை
தானே விழுங்க
முனைந்து
ஸ்தம்பனமான
பாம்பினைப்போல

வரண்டு வெடித்த வயல் வெளி பிளவுகளின்
மழை ஏக்கம் போல……

ஓடும் ஆற்றின் நீர்சுழலுக்குள் அகப்பட்டு
தன்னிலை இழந்த மண் துகளைப் போல…..

மனதின் மதியில் உருவாகி இருக்கும்
இந்த
சலனமின்மையின்
சலனத்தை
தொடர்ந்து
செல்கிறேன்….

எழுதுவது :தர்ஷிணிமாயா