எங்கள் குடியரசு

எங்கள் தேசக் கொடி
அழகாய் அசைவது
வீசும் காற்றினால் அல்ல! உயிர் கொடுத்து சென்ற
நம் வீரர்களின் மூச்சுக் காற்றினால்

ஆம்
வீரர்களின் மூச்சுக் காற்றினால்!
நம் தேசம் நம் இந்திய தேசம்
நமது உரிமை நம் குடியுரிமை
ஒவ்வொரு நாளும் நம் தேசத்தின் நலன் காப்போம்


கடுமையான யுத்தங்கள் பல கடந்து
அருமையான தலைவர்கள் வழியில் நாம் நடந்து


இந்திய ஒருமைப்பாட்டை நம் குழந்தைகளுக்கு எடுத்துக்கூறி


தேசத்தின் பெருமையை காத்திடவே


மக்கள் அதனை உணர்ந்து வாழ்ந்திடவே


வறுமை வாட்டினாலும்
பொறுமையுடன் வாழவும்


சிலையாக இல்லாமல் நாம் சிந்தித்து வாழவே


தியாகம் செய்த செம்மல்கள் நினைத்து
பெருமையுடன் சொல்லிடுவோம் !


எத்தர்கள் எல்லாம் அழியட்டும்
எங்கள் மக்கள் வாழட்டும் !


நித்தம் நல்கின்ற கொடுமைகள்
நிலைமை மண்ணில் மாறட்டும்!


பொறுமையுடன் பெற்ற இன்னாளே
பெருமையாக கொண்டாடுவோம்!


நம் தேசம் நமது உரிமை
நாளும் அதனை காப்போம்!


என் தாய்த் திருநாட்டில் வாழும் கோடான கோடி மக்களுக்கு என் அன்பான குடியரசு தின நல்வாழ்த்துக்கள்.
ஜெய்ஹிந்த்
வந்தே மாதரம்.

எழுதுவது: க.பாலா
மண்மங்கலம் கரூர்.