போதைப்பொருள் கடத்தியவர் கைது..!

அண்மைக்காலமாக போதைப்பொருள் பாவனையானது அதிகரித்து வருகிறது.இதில் பல்வேறு தரப்பினர் பாதிக்கப்படுகின்றனர். இந் நிலையில் தான் வர்த்தக நோக்கில் பலர் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுவருகின்றனர்.

இந்த வகையில் கட்டாருக்கு போதைப்பொருளை கடத்த முயற்சித்த இலங்கையர் ஒருவர் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தோஹா நோக்கி புறப்படவிருந்த விமானத்தின் பயணிகளை சோதனையிடப்பட்ட போது, குறித்த நபரிடமிருந்து இந்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்போது, சந்தேகநபரின் பயணப் பையிலிருந்து 10 கிலோகிராம் 294 கிராம் நிறையுடைய ஹெராயின் போதைப்பொருள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபரான இலங்கையர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பாகிஸ்தானின் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *