மாணிக்க கற்களை கடத்திய பெண் கைது..!

கொழும்பு ஒருகொடவத்த பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடைய பெண் வர்த்தகர் 29 கோடியே 10 லட்சம் பெறுமதியான 2 கிலோ 311 கிராம் 75 மில்லிகிராம் நிறையுடைய மாணிக்க கற்களை உடையில் மறைத்து வைத்து இந்தியாவிற்கு கடத்தி செல்ல முற்பட்ட போது நேற்று கைது செய்யப்பட்டார்.

இந்தியாவின் விமான சேவைக்கு சொந்தமான ஏ.ஐ-274என்ற இலக்கத்தையுடைய விமானத்தின் ஊடாக ,நேற்று காலை 3.15 அளவில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

சென்னைக்கு புறப்பட்டு சென்ற விமானத்தில் பயணிப்பதற்காகவே குறித்த பெண் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *