இன்றைய இளைஞர்களின் கையில் இது தான் முதன்மை வகிக்கிறது..!

மொபைலும் இளைஞர்களும்

காலை விழித்தது முதல் இரவு கண் மூடும் வரை உன்னுடன் நான்

சாட் சாட் சாட் எத்தனை வலைதளங்கள் ஏகப்பட்ட நண்பர்களுடன்

உன்னால் தூக்கம் போனது சிந்தனை போனது சுயமாக சிந்திக்கும் திறனும் போனது

பெற்றோர்களை விட நீ தான் என் அருகில் உன்னை விட்டுவிட்டால் நான் என்னாவது

ஆயிரம் உறவுகளை விட நீதான் என் கைக்கு அடக்கமானவள்

உன்னை வைத்து உலகத்தையே நான் தெரிந்து கொள்கிறேன்

எத்தனை புகைப்படங்கள் எத்தனை காணொளிகள் என்னுள் மாயம் செய்கிறாய்

நீ இன்றி நான் இல்லை நான் இன்றி நீ இல்லை

எத்தனையோ விந்தைகள் எத்தனையோ மாயங்கள்

உன்னை வைத்து பலர் தவறான நோக்கோடு தவறான பாதையில்

இளைஞர்கள் கையில் நீ பல விந்தைகளை கற்றுக் கொடுக்கிறாய் தூங்கா விழிகளாக

நானும் உன்னை வைத்து தான் இந்தக் கவிதை படைக்கிறேன்

பல கவிஞர்களை உருவாக்கிய கவியே நானும் விடைபெறுகிறேன்

நிலவுத்தோழி ஆர் ஜே உமாதேவி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *