இடப்பெயர்விலும் மீளக்குடியமர்விலும் பாடசாலைகளை இயக்கவேண்டிய பெரும் பொறுப்பு அன்று எம்மிடம் இருந்தது- முன்னாள் வடமாகாண கல்விப் பணிப்பளர் திரு.செல்வராஜா

இடப்பெயர்வுக்காலத்திலும் சரி பின்னர் மக்கள் மீளக்குடியமர தொடங்கிய காலங்களிலும் சரி எம் எதிர்கால சந்ததிகளான மாணவர்களின் கல்விக்காக அந்த அந்த இடங்களின் பாடசாலைகளை மீள இயக்க வேண்டிய பெரும் பொறுப்பு ஒவ்வொரு காலகட்டத்திலும் எம்மிடம் இருந்தது. அதை அந்த இடங்களின் சமூகம் ஆசிரியர்கள், நிர்வாக அதிகாரிகளின் உதவியுடன் உடனடியாகவே ஆரம்பிக்ககூடியதாக இருந்தது. அன்றைய நாள்களில் என்று முன்னாள் வடமாகாண கல்விப்பணிப்பளர் திரு.வயிரமுத்து செல்வராஜா அவர்கள் வெற்றிநடை நேரலையின் உரையாடலில் தெரிவித்தார்.

தாயகத்தின் பல்வேறு காலகட்டங்களிலும், கோட்டக்கல்வி அதிகாரி என்ற பதவி நிலை முதல் வடமாகாண கல்விப் பணிப்பாளர் என்ற பதவி நிலை வரை சுமார் 20 க்கும் மேற்பட்ட வருடங்கள் நிர்வாக உயரதிகாரியாக பதவி வகித்த திரு வயிரமுத்து செல்வராசா அவர்கள் வெற்றிநடை உரையாடல் நிகழ்ச்சியில் பேசிய எண்ணங்களையும் அனுபவங்களையும் கீழே உள்ள இணைப்பில் பார்க்கலாம். 👇👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *