இந்த வாரத்தில் அமெரிக்க மத்திய அரசால் இரண்டு மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டன.

வியாழனன்றும், வெள்ளியன்றும் முறையே பிராண்டன் பெர்னார்ட் என்பவருக்கும் அல்பிரட் பூர்ஜியோ என்பவருக்கும் அமெரிக்க அரசு மரணதண்டனையை நிறைவேற்றியது. ஜோ பைடன் பதவியேற்கும் முன்னர் மேலும் மூன்று மரண தண்டனைகள் நிறைவேற்றப்படத் திட்டமிடப்பட்டிருக்கின்றன.

அமெரிக்காவில் மாநில அரசுகளும், மத்திய அரசும் மரண தண்டனை கொடுத்து நிறைவேற்றலாம். கடந்த 17 வருடங்களாக மத்திய அரசு மரண தண்டனைகளை நிறைவேற்றுவதை நிறுத்தி வைத்திருந்தது. டொனால்ட் டிரம்ப்பின் ஆட்சியில் அவை மீண்டும் நிறைவேற்றப்பட ஆரம்பித்தன. ஜூலை மாதத்திலிருந்து இதுவரை மொத்தமாக பத்துப் பேரின் மரண தண்டனைகள் மத்திய அரசினால் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.

பிராண்டன் பெர்னாட்டின் மரண தண்டனை நிறைவேற்றல் அமெரிக்காவில் பெரும் கருத்துச் சர்ச்சைகளை உருவாக்கியது. அவன் குற்றம் செய்யும்போது 17 வயதாக இருந்தான் அத்துடன் மரண தண்டனை நிறைவேற்றப்படும்போது அவனது வயது 40 மட்டுமே. அவனது வழக்கில் பங்குபற்றிய ஜூரிகளில் ஒரு சாரார் பகிரங்கமாக அவனது மரண தண்டனையை நிறுத்தும்படி வேண்டியிருந்தாலும், நீதியமைச்சர் வில்லியம் பர் அவற்றைக் கணக்கிலெடுக்கவில்லை.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *