பிரித்தானியாவிலிருந்து விமானங்கள் இலங்கையில் தரையிறக்க தடை

பிரித்தானியாவிலிருந்து வரும் விமானங்கள் இலங்கையில் தரையிறக்க தடை போடப்படுகிறது.குறித்த சிறீலங்கா சிவில் விமானப் போக்குவரத்து சேவையின் தலைவர் வெளியிட்டுள்ளார்.

நாளை அதிகாலை 02.00 மணி முதல் பிரித்தானியாவிலிருந்து இருந்து வரும் எந்த விமானங்களும் இலங்கையில் தரையிங்க முடியாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது பிரித்தானியாவின் சில பகுதிகளில் பரவ ஆரம்பித்துள்ள புதிய வகை variant கொரோனா வைரஸ் காரணமாக பிரித்தானியாவில் இருந்து புறப்படும் விமானங்களுக்கு பல நாடுகளும் தடை விதித்து வருகின்ற நிலையின் தொடர்ச்சியாக சிறீலங்காவும் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

அதேவேளை ஏற்கனவே இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் அல்லது அங்கிருந்து வெளிநாடுகளுக்கு புறப்பட தயாராகும் பயணிகளுக்கும் பயணத்துக்கு சாதகமாக விமான நிலையங்களைத் திறப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் அதேவேளை, அதன் முன்னோடிக் கருத்திட்டமாக 2020 திசம்பர் மாதம் 26 ஆம் திகதி தொடக்கம் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19 ஆம் திகதி வரை சுகாதார பரிந்துரைகளைப் பின்பற்றி வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு விமான நிலையங்களைத் திறப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *