ஆங்கிலக்கால்வாய் அகதிகளை நிறுத்த பிரான்ஸ் – ஐக்கிய ராச்சியம் கூட்டுறவுப் பிரகடனம்.

ஐக்கிய ராச்சியத்தின் பிரதமராகியதும் தனது முக்கிய குறிகளில் ஒன்று என்று ரிஷி சுனாக்  குறிப்பிட்ட விடயம் பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாய் வழியாக பிரிட்டனுக்குள் நுழையும் அகதிகளை நிறுத்துவதாகும். அதையே உள்துறை அமைச்சர் சுவெல்லா பிரேவர்மானும் பல தடவைகள் தனக்கு முன்னாலிருக்கும் முக்கிய சவாலென்று குறிப்பிட்டிருந்தார். 

பாரிஸில் திங்களன்று இரண்டு தரப்பாரும் ஆங்கிலக்கால்வாய் அகதிகளை நிறுத்தும் ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திடவிருப்பதாக பத்திரிகையாளர்களுக்குத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த நிகழ்ச்சியில் பிரெஞ்ச் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டர்மானின் தனது பிரிட்டிஷ் சகாவுடன் கலந்துகொண்டு கூட்டுறவுப் பிரகடனத்தில் கைச்சாத்திடுவார். 

அந்த ஒப்பந்த விபரங்கள் எவையென்று வெளியிட இரண்டு தரப்பாரும் மறுத்திருக்கிறார்கள்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *