முன்னாள் ஜனாதிபதிக்காக உண்டியல் குலுக்கிய கலைஞர்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 10 கோடி ரூபா நட்டஈட்டை வழங்க வேண்டுமென  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில்,  அந்த பணத்தை சேகரிக்கும் முயற்சில்   சிங்களக் கலைஞர் சுதத்த திலகசிறி ஈடுபட்டார் . கொழும்பு கோட்டையின் வெளிப்புறத்தில் நின்றபடி மக்களிடம் உண்டியல் குலுக்கி  பண சேகரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டார்.

அதன்படி குறித்த உண்டியலில் அவர் திரட்டிய மொத்தப்பணம் 1,810 ரூபா என தெரிவித்துள்ளார். அந்த வகையில் குறித்த பணத்தை முன்னாள் ஜனாதிபதி மைத்திரியிடம் கையளிக்க குறித்த தகவலை மக்களுக்கு கலைஞர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் பாராளுமன்றத்தில் நீதிமன்றத்தினால்  உத்தரவிடப்பட்ட  10 கோடி ரூபா நட்டஈட்டை செலுத்துமளவுக்கு  தன்னிடம் சொத்துக்கள் இல்லை என முன்னாள் ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டிருந்தார். அத்துடன் அந்தப் பணத்தை தனது நண்பர்களிடம் பெற்றுக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *