ஹாட்லியின் புதிய அதிபர் – திரு தம்பையா கலைச்செல்வன் அவர்கள்

பருத்தித்துறை ஹாட்லிக்கல்லூரியின் புதிய அதிபராக ஆசிரியர் திரு தம்பையா கலைச்செல்வன் அவர்கள் இன்று காலை பதவியேற்றார்.

கல்லூரி வரலாற்றில் தனக்கென ஒரு தனியான வகிபாகத்தை வகித்த ஆசிரியர் கலைச்செல்வன் அவர்கள் இன்று கல்லூரியின் தலைமைத்துவத்தை ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் முன்னிலையில் பதவியேற்றார்.

கல்லூரியின் ஆசிரியராக தொண்ணூறுகளின் முற்பகுதியில் நியமனம் பெற்றிருந்த திரு.த.கலைச்செல்வன் அவர்கள்,கல்லூரியில் முக்கிய பல பொறுப்புவாய்ந்த பணிகளில் 25 வருடங்களுக்கு மேலாக செயலாற்றியவர் ஆவார்.

நிறைவாக அவர் கல்லூரியின் உப அதிபராக பணியாற்றி இன்று கல்லூரியின் அதிபராக தன் கடமைகளை பொறுப்பேற்றார்.

பாடசாலையில் பல்வேறு தலைமுறைகளைக் கண்ட நீண்ட கால அனுபவம் வாய்ந்த ஒருவராக மிளிர்ந்து, கல்லூரிக்கு அதிபராக வருவது குறித்து பலரும் தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றார்கள்.

பலரும் மெச்சும் பருத்தித்துறை ஹாட்லிக்கல்லூரியின் அதிபராக பதவியேற்கும் திரு.தம்பையா கலைச்செல்வன் ஆசிரியர் அவர்களை, வெற்றிநடை ஊடகம், ஆசிரியரின் தொடர்ச்சியான பணிகளுக்கும் எதிர்கால பணிகளுக்குமாக அன்புடன் வாழ்த்துகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *