வாரம் இரு சுய பரிசோதனைக்காக கருவிகளை வழங்குகிறது பிரிட்டன்.

பிரதமர் பொறிஸ் ஜோன்சன் இரண்டா வது கட்டத் தளர்வுகளை இன்று மாலை அறிவித்தார். வாரம் இரு சுய பரிசோதனைக்காககருவிகளை வழங்குகிறது பிரிட்டன்உணவகங்களின் வெளி சேவைகள் திங்கள் ஆரம்பம்,கடைகளும் திறப்பு.

அதில் முக்கியமாக உணவகங்களும்அருந்தகங்களும் அவற்றின் வெளி சேவைகளை (serving customers outdoors) வரும் ஏப்ரல் 12 ஆம் திகதி முதல் தொடங் கலாம். சகல வர்த்தக நிலையங்களும் அன்று தொடக்கம் முழுமையாகத் திறக் கப்படும்.

டவுனிங் வீதி அலுவலகத்தில் அவர் நடத்திய செய்தியாளர் மாநாட்டின் போது அவருடன் தலைமை அறிவியல் ஆலோ சகர் Patrick Vallance, இங்கிலாந்து மருத்து வமனைகளின் தலைமை அதிகாரி Chris Whitty ஆகியோரும் கலந்து கொண்டனர்.

பிரதமர் பொறிஸ் ஜோன்சன் தனது நாட்டுப் பிரஜைகள் அனைவரும் வாரத் தில் இரண்டு தடவைகள் தங்களைத் தாங்களே சுய வைரஸ் பரிசோதனை செய்து கொள்ள வசதியாக அதற்கானகருவிகளை அரசு இலவசமாக வழங்கும்என்று அறிவித்திருக்கிறார்.

அரசின் வைரஸ் பரிசோதனை நடவடிக் கைகளை விரைவுபடுத்துவதற்காக மருந்தகங்கள், சோதனை மையங்கள் போன்ற இடங்களிலும் தபால் மூலமும்கருவிகள் மக்களுக்கு விநியோகிக்கப்படஉள்ளன.

முப்பது நிமிடங்களில் பெறுபேறுகளைப்பெற்றுக்கொள்ளக் கூடிய இந்த வைரஸ்பரிசோதனைக் கருவிகள்( lateral flow kits)தொற்று அறிகுறி இல்லாத நிலையிலும்ஒருவர் தனக்குத் தொற்று ஏற்பட்டிருப் பதை தானே பரிசோதித்துத் தெரிந்துகொள்ள உதவும்.தற்சமயம் பரவிவருகின்ற வைரஸ் திரிபுகள் தொற்றியோரில் மூன்றில் இரண்டு பேர் எந்தவித அறிகுறிகளையும் வெளிப் படுத்தாதவர்களாக இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கட்டத்தில் தொற்று நிலைமையை விரைந்து மதிப்பிடுவதற்கு சுயபரிசோதனைகள் உதவும் என்று அரசு நம்புகிறது. ஆனால் பல மில்லியன் பவுண்ட்ஸ் நிதிச் செலவில் கருவிகளை மக்களுக்கு இலவ சமாக வழங்கும் திட்டம் முறைகேடுகளால் பெரும் நிதி விரையத்தை ஏற்படுத்தலாம் என்று அரசின் நடவடிக்கைகளை விமர்சிப்பவர்கள் கூறுகின்றனர்.

அதைவிட தங்களுக்கு வைரஸ் தொற்றியுள்ளதாக சுயபரிசோதனை மூலம் போலியாகப் பதிவுகளைச் செய்பவர்கள் கட்டுப்பாடுகளைத் தளர்த்துகின்ற முடிவுக்கு எதிர்மாறான நடவடிக்கைகளை எடுப்பதற்கு அரசைத் திசை திருப்பிவிடு வர் என்றும் சிலர் கருதுகின்றனர்.

🟢சர்வதேச பயணங்கள் மே 17 முதல்மே 17 முதல் சர்வதேச பயணங்களை ஆரம்பிப்பதற்கு அரசு “நம்பிக்கை” கொண்டுள்ளது என்றும் பிரதமர் இன்றுஅறிவித்தார். ஆனால் எல்லை தாண்டிய பயணங்கள் வைரஸின் புதிய திரிபுகளை மீண்டும் நாட்டுக்குள் இறக்குமதி செய்துவிடலாம் என்ற அச்சத்தைக்”குறைத்து மதிப்பிடமுடியாது” என்றும் எச்சரித்தார்.

பிரிட்டிஷ் மக்கள் வெளிநாடுகளுக்கானபயணங்களை மே 17 ஆம் திகதி முதல்தொடங்குவதற்கு வசதிகளைச் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் அதற்காக அவசரப்பட்டு இப்போதே ஆசனப் பதிவுகளைச் செய்ய வேண்டாம் என்று மக்களை அறிவுறுத்தி உள்ளது.

நாளாந்தக் கருமங்களில் ஈடுபடுவதற்கு தடுப்பூசிச் சான்றிதழ் (vaccine passport) அவசியமா என்பது குறித்து பிரதமரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.”இரண்டாவது, மூன்றாவது கட்டத் தளர்வுகளின் போது அது அவசியமான ஒன்றாக இருக்காது. அதுபற்றி மேலதிக விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்”என்றார்.

குமாரதாஸன். பாரிஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *